31 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்கப்படாத தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? எனும் தலைப்பிலான கலந்துரையாடல் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (31.01.2026) மாலை-03.15 மணியளவில் யாழ். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் இடம்பெறும்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில்- சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் கேட்டுள்ளார்.