திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரிகெட்டிய கடலலையில் அள்ளுண்ட நபரொருவர் திக்வெல்ல பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.