சிறுபோக நெல் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள பிரதேசத்தில் விவசாயிகளுக்கு உரத்தை முறையாக விநியோகிப்பதற்கு சகல விடுமுறை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் குறித்த பிரதேசத்தில் உள்ள கமநல சேவை மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிறுபோக நெல் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள பிரதேசத்தில் விவசாயிகளுக்கு உரத்தை முறையாக விநியோகிப்பதற்கு சகல விடுமுறை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் குறித்த பிரதேசத்தில் உள்ள கமநல சேவை மத்திய நிலையம் திறந்து வைக்கப்படும்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமையால் உர விநியோகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு, தடை மற்றும் பல்வேறு தரப்பினால் உரத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட காரணிகளால் நெற் பயிர்ச்செய்கைக்கு தேவைக்கான களப்பில்லாத உரத்தை அரச கமநல சேவை மத்திய நிலையம் ஊடாக மாத்திரம் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய சிறுபோகத்தில் நெற் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பிரதேசங்களில் கமநல சேவை மத்திய நிலையம் ஊடாக உரம் விநியோகிக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கமநல சேவை மத்திய நிலையம் ஊடாக 50 கிலோகிராம் யூரியா உரம் 9900 -10,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.