மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச கடல்சார் வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாரிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,
"சர்வதேச கடல்சார் வர்த்தகத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்க அபிவிருத்தி நிதிச் சபை ஊடாக மிகக் குறைந்த விலையில் 'அரசியல் இடர் காப்புறுதி' மற்றும் உத்தரவாதங்களை வழங்குவதற்கு நான் உடனடியாக உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் வளைகுடா பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கான நிதி ரீதியான அச்சுறுத்தல்கள் நீக்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமுஸ் நீரிணையில் அதிகரித்து வரும் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, தேவைப்படின் அமெரிக்க கடற்படை நேரடியாக களமிறங்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
"மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் பாதுகாப்பாக ஹோமுஸ் நீரிணையைக் கடப்பதை உறுதி செய்ய, எமது கடற்படை மிக விரைவில் பாதுகாப்பு மற்றும் வழித்துணை பணிகளை ஆரம்பிக்கும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஹோமுஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் எச்சரித்திருந்தது. இதனால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், கப்பல் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தகக் கப்பல்களுக்கு காப்புறுதி மற்றும் அமெரிக்க கடற்படை பாதுகாப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space