யாழ். மண்டைதீவு-06 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த திருமதி. சிவமணி சந்திரவதனா மரணமான செய்தி அறிந்து அதிர்ச்சியில் ஒரு சில மணி நேர இடைவெளியில் அவரது மூத்த சகோதரி திருமதி. சிவசம்பு சந்திரோதயம் மரணமாகியுள்ளார். குறித்த சம்பவங்கள்  செவ்வாய்க்கிழமை (06.05.2026) பதிவாகியுள்ளது.

மரணத்திலும் இணை பிரியாத இரு சகோதரிகளினதும் பிரிவு யாழ்.மண்டைதீவுக் கிராமம் முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.