மருதங்கேணிப் பொதுச் சந்தையின் வளாகம் செவ்வாய்க்கிழமை (27.01.2026) பருத்தித்துறைப் பிரதேச சபையால் விசேட சிரமதானம்  மூலம் துப்புரவு செய்யப்பட்டது.

மேற்படி பொதுச் சந்தை வளாகம் முழுவதும் பற்றைகள் மற்றும் மிருக எச்சங்கள் சூழ்ந்து காணப்பட்டமையால் சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்த நிலையிலேயே இந்தச் சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.