ஹோமாகம - மொரகஹஹேன பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (09) இரவு தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குறித்த ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.