நல்லூர்த் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (26.01.2026) நல்லூரிலுள்ள சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடப் பீடாதிபதி சர்வேஸ்வரன் குருக்கள் பத்மநாபன் கலந்து கொண்டு புத்திரப் பாக்கியம் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து குருபூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.