ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றில், 30 மில்லியன் யூரோ மதிப்பிலான கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜேர்மனியில் வங்கி கொள்ளை
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள கெல்சென்கிர்சென் (Gelsenkirchen) நகரத்தில், ஸ்பார்காஸே (Sparkasse) வங்கிக்கிளை ஒன்று இயங்கி வந்துள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வங்கி மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளை கும்பல் ஒன்று, சுவரில் துளையிட்டு பாரிய வங்கி கொள்ளையை நிகழ்த்தியுள்ளது.