ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் குடிமக்களை பிராந்தியத்திலிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளன.

ஈரானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக ஊழியர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரிட்டன் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசரகாலம் அல்லாத பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சீனா, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் பாதுகாப்பு காரணங்களால் ஈரானில் வசிக்கும் தங்கள் குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு அறிவித்துள்ளது.