15 வயதுக்கு குறைவான பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஒன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவை, 15 வயதுக்கு குறைவான பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 130 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

சட்டமாகும் முன், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையில் வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டும்.