மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து இந்த மறுசீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிக்கையொன்றை வெளியிட்டு, தெரிவித்துள்ளது.

மின்சாரத்துறையின் வளர்ச்சி ஒரு தேசியத் தேவை என்பதை உணர்ந்து, ஊழியர்கள், நுகர்வோர் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.