ஆறாம் தரத்திற்கான புதிய கல்வி சீர்திருத்தத்தை அமல்படுத்தக் கோரி நாவலப்பிட்டி நகரில் சனிக்கிழமை (24) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
‘எங்கள் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக அனைத்து ஆறாம் தர வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களும் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், கல்வி மறு சீரமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த அமைதிப் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஆறாம் தர மாணவர்களின் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
நாவலப்பிட்டியில் ஆறாம் தர கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space