முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய சாட்சியங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று திங்கட்கிழமை (26) உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுவத்றகாக போலி தகவல்களை வழங்குதல் மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுவத்றகாக போலி தகவல்களை வழங்குதல் மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருத்தல் உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் டயானா கமகேவுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.