சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டங்களை உருவாக்கவும் வலுப்படுத்தவும், சம்பந்தப்பட்ட அனைத்துக் குழுக்களுடனும் பரந்தளவிலான ஆலோசனைகளை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

இது, மத ரீதியான தப்பெண்ணங்களால் திசைதிருப்பப்படாமல் அல்லது அரசியல்மயமாக்கப்படாமல் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும் என ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.