சவுதி அரேபி​யா, ஏமனின் ஹவுதி கிளர்ச்​சிப் படை இடையே போர் தீவிரமடைந்து வரு​கிறது. புனித மெக்கா நகரை குறி​வைத்து ஹவுதி கிளர்ச்​சிப் படை நேற்று நடத்​திய ட்ரோன் தாக்​குதல் வெற்​றிகர​மாக முறியடிக்​கப்​பட்​டது.ஏமன் நாட்​டில் ஹவுதி கிளர்ச்​சிப் படை, பிஎல்​சி, எஸ்​டிசி ஆகிய 3 குழுக்​கள் தனித்​தனி​யாக ஆட்சி நடத்தி வரு​கின்​றன. இந்த மூன்று குழுக்​களும் பரஸ்​பரம் மோதலில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இதில் ஹவுதி கிளர்ச்​சிப் படைக்கு ஈரானும், பிஎல்​சி-க்கு சவுதி அரேபி​யா​வும், எஸ்​டிசி-க்கு ஐக்​கிய அரபு அமீரக​மும் ஆதரவு அளித்து வரு​கின்​றன.கடந்த சில நாட்​களாக சவுதி அரேபி​யா, ஹவுதி கிளர்ச்​சிப் படை இடையே தீவிர போர் நடை​பெற்று வரு​கிறது. ஹவுதி படை​யின் தலைநக​ரான சனா மற்​றும் ஹோடைடா துறை​முகம் மீது சவுதி போர் விமானங்​கள் குண்​டுமழை பொழிந்து வரு​கின்​றன. இதற்​குப் பதிலடி​யாக சவு​தி​யின் ஜெட்​டா, தயூப் நகரங்​கள் மீது ஹவுதி படை ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்தி வரு​கிறது.