சவுதி அரேபியா, ஹவுதி இடையே போர் தீவிரமடைகிறது
Ad Space
Ad Space
Ad Space
சவுதி அரேபியா, ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப் படை இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. புனித மெக்கா நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிப் படை நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சிப் படை, பிஎல்சி, எஸ்டிசி ஆகிய 3 குழுக்கள் தனித்தனியாக ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த மூன்று குழுக்களும் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும், பிஎல்சி-க்கு சவுதி அரேபியாவும், எஸ்டிசி-க்கு ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு அளித்து வருகின்றன.கடந்த சில நாட்களாக சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சிப் படை இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. ஹவுதி படையின் தலைநகரான சனா மற்றும் ஹோடைடா துறைமுகம் மீது சவுதி போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக சவுதியின் ஜெட்டா, தயூப் நகரங்கள் மீது ஹவுதி படை ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
Ad Space
Ad Space
Ad Space