தொண்டைமானாறு தெற்கு ஜே-383 கிராம அலுவலர் பிரிவு, கெருடாவில் வடக்கு ஜே- 386 கிராம அலுவலர் பிரிவு, கெருடாவில் தெற்கு ஜே-385 கிராம அலுவலர் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான சத்துணவுப் பொருட்கள் திங்கட்கிழமை (30.03.2026) காலை வழங்கப்பட்டன.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் சத்துணவுப் பொருட்களை நேரடியாக வழங்கி வைத்தார்.