ரஷ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்புப் போர் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் காணாமல் போனோர் உட்பட இராணுவ ரீதியான மொத்த பாதிப்புகள் சுமார் 20 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) தரவுகளின்படி,
சுமார் 12 இலட்சம் மொத்த பாதிப்புகளில், ரஷ்ய தரப்பில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,25,000 ஆகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், எந்தவொரு பெரிய வல்லரசு நாடும் இவ்வளவு பெரிய அளவிலான உயிரிழப்புகளையோ அல்லது பாதிப்புகளையோ சந்தித்ததில்லை என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வளவு பெரிய இழப்புகளைச் சந்தித்தபோதிலும், ரஷ்யப் படைகள் போர்க்களத்தில் மிக மெதுவாகவே முன்னேறி வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
உக்ரேன் தரப்பிலும் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில், உக்ரேன் இராணுவத்தின் மொத்த பாதிப்புகள் 5,00,000 முதல் 6,00,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,00,000 முதல் 1,40,000 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரேன் தரப்பில் மொத்த இராணுவப் பாதிப்புகள் 18 இலட்சமாக அதிகரித்துள்ள நிலையில், இது 2026 வசந்த காலத்திற்குள் 20 இலட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவ வீரர்களைத் தவிர்த்து, பொதுமக்களுக்கும் இந்த போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அதிக பொதுமக்களின் உயிரிழப்புகள் பதிவான ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 15,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐ. உறுதிப்படுத்தியுள்ள போதிலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி சுமார் 46,000 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது என்று கருதுகின்றனர். அதேபோல், ரஷ்யாவின் பிபிசி சேவை மற்றும் மீடியாசோனா போன்ற ஊடகங்கள் இதுவரை 1,63,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என்று அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
உக்ரேன் போர்: இரு தரப்பிலும் சுமார் 20 இலட்சம் இராணுவத்தினர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space