அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானிய போராட்டக்காரர்களை தங்கள் போராட்டங்களைத் தொடருமாறு அழைப்பு விடுத்துள்ளார், மேலும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த ஆதரவு அமெரிக்கா எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் குறிக்கிறதா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில், "ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராட்டம் நடத்துங்கள் - உங்கள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்!!! ... ஆதரவு வருகிறது" என்று எழுதினார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தண்டனை நடவடிக்கையாகக் கருதப்படும் விருப்பங்களில் ஒன்றாகும் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.
ஈரான் தற்போது பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை சந்தித்து வருகிறது.
பாதுகாப்புப் படையினர் உட்பட 2,000 க்கும் மேற்பட்டோர் போராட்டங்களில் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிலிருந்தும் வரும் பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக ஈரானும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
"ஈரானில் தொடர்ந்து போராட்டம் நடத்துங்கள் - ஆதரவு வருகிறது" டிரம்பின் செய்தி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space