ஈரான் - தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் காரணமாக குறித்த எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தீப்பற்றிய எண்ணெய் கிடங்கில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வளிமண்டலத்தில் கலக்கும் கரும்புகை காரணமாக அமில மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்ததை அடுத்து, காற்றில் அதிகளவு கரும்புகை கலந்திருப்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலால் தீப்பற்றி எரியும் தெஹ்ரான் எண்ணெய் கிடங்கு: அமில மழை எச்சரிக்கை விடுத்த ஈரான்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space